அறிவாளிகளுக்கு அறிவாளி போராளிகளுக்கு போராளி, மூலதனம் தந்த முற்போக்காளர்களின் மூலதனம் புரட்சிக்கு பெயர் மார்க்ஸ், இல்லையென்ற கடவுள் இருந்தால் நீ தான் அதான் ஜெராக்ஸ்.. நீ தத்துவங்களின் நகல் நீ நகல் எடுக்க முடியாத அசல் ஒவ்வொரு தேசத்திலும் உனக்கு ஒவ்வொரு பெயர் எனது நாட்டில் உந்தன் பெயர் அம்பேத்கர் எனது ஊரில் பெரியார்.. மஞ்சள் உடலுக்கு நலன் சிவப்பு உலத்திற்கு பயன் வீழ்ந்து விட்டதாய் சொல்லலாம் உன்னை சாய்க்க முடியாதவர்கள் முடிந்து விட்டதாய் சொல்லலாம் மக்களை ஏய்க்க முடியாதவர்கள் இயற்கை தோற்றுவித்த இறைத் தூதர் நீ – எங்களை ரட்சிக்க வந்த இயேசு நாதர்.. - இளம்கவி ராஜேஷ்